tamilnadu

img

வெள்ளகோவில் நகராட்சியின் குழாய் குடிநீரில் சிவப்பு நிறப்புழுக்கள்: மக்கள் அதிர்ச்சி

திருப்பூர், பிப். 20 - திருப்பூர் மாவட்டம் வெள்ளகோ வில் நகராட்சி மூலம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குழாய் குடிநீரில் சிவப்பு நிறப்பு ழுக்கள் இருந்தது கண்டு பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளகோவில் நகராட்சி 16 ஆவது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான கிணற்றிலிருந்து சிறிது உப்புத்தன்மை கலந்த தண்ணீர் 16 ஆவது வார்டு மற் றும் 18 ஆவது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் நிரப்பப்பட்டு குழாய் மூலம் அப்பகுதி பொதுமக்கள் வசிக்கும் வீதிகளுக்கு விநியோகிக் கப்பட்டு வருகிறது.இந்த தண்ணீ ரில் தற்போது சிவப்பு நிறத்தில் புழுக்கள் அதிகமாக கலந்து வரு வது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது, நகராட்சி சார்பில் குழாய் மூலம் வழங்கப்படு கின்ற தண்ணீர் தினமும் காலை இரண்டு மணிநேரம் வந்து கொண் டிருக்கிறது. தற்போது இந்த தண் ணீரில் சிவப்பு நிறத்தில் புழுக்கள் காணப்படுவது எங்களை அதிர்ச் சிக்கு ஆளாக்கி இருக்கிறது. இந்த தண்ணீரை நாங்கள் பெரும்பா லும் வெளிப்புற உபயோகத் திற்கே பயன்படுத்தி வருகிறோம் என்றாலும் காவிரி, அமராவதி போன்ற ஆற்று நீர்வரத்து குறை யும் போது இந்த நீரைத்தான் நாங் கள் குடிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இப்புழுக்கள் கலந்த தண்ணீரைப் பயன்படுத்துவதால் எங்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள் ளது. ஆகவே, கிணற்றையும், தண் ணீர் நிரப்பப்படும் குடிநீர் தொட்டி களையும் உடனடியாக சுத்தப்ப டுத்த வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ளவேண்டும் என்று தெரி வித்துள்ளனர். இந்த தண்ணீர் எடுக்கப்படும் கிணறு பள்ளிக்கு அருகில் இருப்ப தால் பள்ளிக் குழந்தைகளின் பாது காப்பை முன்னிட்டு கிணற்றைச் சுற்றிலும் இரும்பு கிரில் அமைக் கப்பட்டுள்ளது. தற்போது எவ்வித பராமரிப்புமின்றி இக்கிணறும், இக்கிணற்றிலிருந்து நீர் நிரப்பப்ப டும் குடிநீர் தொட்டிகளும் இருப்ப தால் இவைகளைச் சுத்திகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. மேலும், வெள்ளகோவில் பகு தியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் முக்கிய இணைப்பு உள்ள பல இடங்களில் பராமரிப்பின்மை காரணமாக நிலவும் சுகாதாரச் சீர் கேட்டால் புழுக்கள் உருவாகி சுகா தாரம் பாதிக்கப்படுவதாக தற் போது சமூக ஆர்வலர்களின் குற் றச்சாட்டு அடங்கிய காணொலி வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வெள்ளகோவில் நக ராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சுகாதாரத்தைப் பேண நடவடிக்கை எடுக்க வேண் டும் என மக்கள் எதிர்பார்க்கின்ற னர்.